PM Modi says should Respect, don't abuse

இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்று வருகிறது. பல்வெறு இடங்களில் ஆறு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில், இறுதிகட்டமாக ஜூன் 1ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஏழு கட்டங்களாக நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட இருக்கின்றன.

இந்த நிலையில், 2024 மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது எதிர்க்கட்சிகள் தனிப்பட்ட தாக்குதல் நடத்துவதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து பிரதமர் கூறுகையில், “என்னைப் பொறுத்த வரையில், கடந்த 24 ஆண்டுகளாக தொடர்ந்து அவதூறுக்கு ஆளாகி, ஆதாரங்களை காலிஆக்கிவிட்டேன். நாடாளுமன்றத்தில், எதிர்க்கட்சியினர் என்னை 101 முறை துஷ்பிரயோகம் செய்ததாக எங்கள் கட்சி உறுப்பினர் கணக்கிட்டுள்ளார்.

ஆனால்தேர்தல் வந்தாலும் சரி, தேர்தல் நடக்காவிட்டாலும் சரி, எதிர்க்கட்சியினர் துஷ்பிரயோகம் செய்ய அவர்களுக்கு மட்டுமே உரிமை உண்டு என்று நம்புகிறார்கள். அவர்கள் மிகவும் விரக்தியடைந்துள்ளனர். அதனால், என்னை துஷ்பிரயோகம் செய்கிறார்கள். இது அவர்களின் இயல்புதான். விசாரணை அமைப்புகளை ஒடுக்குவதற்கு தவறாக பயன்படுத்தப்படுகிறது என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி குப்பைகளை வீசுகின்றனர். அவர்கள் அப்படி சொல்வதற்கு என்ன ஆதாரம்?.

Advertisment

இந்தக் குப்பையை உரமாக மாற்றி, அதிலிருந்து நாட்டுக்கு நல்லவற்றை விளைவிப்பேன். மன்மோகன் சிங் ஆட்சியில் இருந்தபோது 10 ஆண்டுகளில் ரூ.34 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. தற்போது கடந்த 10 ஆண்டுகளில் ரூ.2,200 கோடியை அமலாக்கத்துறை கைப்பற்றியுள்ளது. ரூ.2,200 கோடியை நாட்டுக்கு திரும்ப கொண்டு வந்தவரை மதிக்கவேண்டும். துஷ்பிரயோகம் செய்யக்கூடாது” என்று கூறினார்.