Skip to main content

கரோனாவே இல்லை... 100 கோடி ரூபாய் இன்ஸ்சூரன்ஸ் கொடுங்கள்! - மன்சூர்அலிகான் ஆவேசம்..!

Published on 17/04/2021 | Edited on 17/04/2021

 

ddd

 

நடிகர் விவேக் சென்னை சாலிகிராமம் பத்மாவதி நகரில் உள்ள வீட்டில் இருந்தார். அப்போது அவருக்குத் திடீரென்று நெஞ்சுவலியும், மூச்சுத்திணறலும் ஏற்பட்டது. மயக்க நிலைக்குச் சென்றார். உடனடியாக அவரை வடபழனியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். விவேக்கை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இந்த நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை 4.35 மணியளவில் நடிகர் விவேக் காலமானார். 

 

முன்னதாக நேற்று மன்சூர்அலிகான் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ''நாட்டு மக்கள் ஆட்டு மந்தைகளா? வெறி நாய்களா? உங்க இஷ்டத்துக்கு ஊசி போடுவீங்களா? அந்த ஊசியில் என்ன கண்டெண்ட் இருக்கு. அந்த ஊசியை ஏன் கம்பெல் பண்ணிப் போடுறீங்க? கேட்க யாருமே இல்லையா? 

 

ஒரு வருஷமா சொல்கிறேன். கரோனா டெஸ்ட் எடுப்பதை நிப்பாட்டுங்க. இந்தியா முழுக்க நிப்பாட்டுங்க. அடுத்த நிமிஷம் கரோனா இருக்காது. நேற்று நல்லாதானே இருந்தார் இந்த மனுஷன். எதுக்கு ஊசி போட்டீங்க. அந்த ஊசியில் என்ன கண்டெண்ட் இருக்கு. கரோனா என்பது சளி, காய்ச்சலில் ரொம்ப வருசமாகவே இருக்கு. கரோனாவை வைத்து அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். நான் குற்றம் சுமத்துகிறேன். கேட்பதற்கு எங்களுக்கு உரிமை இருக்கிறது. ஏதாவது ஒன்று என்றால் யார் பதில் சொல்வது. 

 

நான் தொண்டாமுத்தூரில் குப்பையில் படுத்திருந்தேன். பிச்சைக்காரர்களிடம் சோறு வாங்கிச் சாப்பிட்டேன். எனக்குக் கரோனா வரவில்லை. மாஸ்க் போடுவது எவ்வளவு பைத்தியக்காரத்தனம் தெரியுமா? 

 

யார் கேட்டா ஊசி. எதற்கு ஊசி. கரோனாவே இல்லை என்று நான் சொல்கிறேன். என்னைத் தூக்கி ஜெயிலில் போடுங்கள். ஏதாவது ஆச்சு, நடக்குறதே வேற. கரோனா எங்க இருக்கு. டெஸ்ட் தப்பா பண்ணிக் கொண்டிருக்கிறார்கள். மாத்திரை தப்பா கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ரெடில்ஸ் படப்பிடிப்பு நடக்கிறது. அதில் கலந்துகொள்ள டெஸ்ட் எடுக்க 3 ஆயிரம் ரூபாய் வசூல் செய்கிறார்கள். எங்கே போவாங்க பணத்துக்கு. அதில் கமிஷன் பாக்குறாங்க. கரோனா இருக்கு என்று சொல்றீங்களா. அப்படி என்றால் அனைவருக்கும் ஒரு லட்சம் ரூபாய் கொடுங்கள். இல்லையென்றால் கரோனாவே இல்லை என்று அறிவியுங்கள்.

 

உடல்நிலை சரியில்லாமல் இருந்தால்தான் ஊசி போடணும். நல்லா இருக்கிறவர்களுக்கு எதற்கு ஊசி. அப்படி ஊசி போடணும் என்றால் இன்ஸ்சூரன்ஸ் கொடுங்கள். 100 கோடி ரூபாய் இன்ஸ்சூரன்ஸ் கொடுங்கள். அதை ஏற்றுக்கொள்ளுங்கள். ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்கிறீர்கள். பின்னர் ஏன் ஊசி போடுகிறீர்கள். 

 

பெருந்தொற்று, பெருந்தொற்று என்று சொல்கிறீர்கள். ஜெயலலிதா எதிர்கொள்ளவில்லையா? டெங்கு காய்ச்சல் வரலையா? நிலவேம்பு கசாயம் கொடுக்கவில்லையா? மூலிகையை டெவலப் செய்யுங்க. கசாயம் குடியுங்கள். செல்வாக்கு இழந்த அரசியல். செல்வாக்கு இழந்த தலைவர்கள். முற்றிலும் செல்லாக்காசா செல்வாக்கு இழந்த இந்த அரசாங்கம் கரோனாவை கையில் பிடித்துக்கொண்டு மக்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது'' என்றார் ஆவேசமாக. 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கட்டாயப்படுத்தி, ஜூஸ் குடுத்தாங்க” - மன்சூர் அலிகான் பரபரப்பு அறிக்கை

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
mansoor ali khan issued a statement about his health conditio

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ள நிலையில், முதற்கட்ட வாக்குப் பதிவு நாளை (19.04.2024) தொடங்குகிறது. இதில் தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகள் அடங்கும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டதையடுத்து நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் ஆணையத்தின் விதிப்படி பிரச்சாரத்தை முடித்துக் கொண்டனர். 

இதனிடையே இந்தத் தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் மன்சூர் அலிகான், தனக்கு ஒதுக்கப்பட்ட பலாப்பழ சின்னத்தை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்தும் வகையில் தொடர்ச்சியாகக் காய்கறி மார்க்கெட், மீன் மார்க்கெட் என வேலூர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். 

அந்த வகையில் பிரச்சாரத்தின் கடைசி நாளான நேற்று, வேலூர் குடியாத்தம் பகுதியில் தீவிர பரப்புரையில் ஈடுபட்ட மன்சூர் அலிகானுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனையில் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சென்னை கே.கே.நகரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்தார். 

இந்த நிலையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டது குறித்து மன்சூர் அலிகான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “நேற்று குடியாத்தம் சந்தையிலிருந்து திரும்பி ஒரு இடத்துல, கட்டாயப்படுத்தி, பழ ஜூஸ் குடுத்தாங்க. அதன் பிறகு, மோர் குடுத்தாங்க. குடிச்ச உடனே வண்டியில் இருந்து விழ இருந்தேன். மயக்கம், அடி நெஞ்சு தாங்க முடியாத வலி, உடனே பாலாறு ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனாங்க, சிகிச்சை  கொடுத்தும் வலி நிக்கல. வலி அதிகமாகவும் சென்னைக்கு ஆம்புலன்ஸ்ல கூட்டிட்டு வந்து, ஐ.சி.யூ-ல அட்மிட் பண்ணி, இப்ப கொஞ்சம் கம்மியாயிருக்கு. விஷ முறிவு, நுரையீரல் வலி போக ட்ரிப்ஸ் குடுத்தார்கள். இன்று மதியம் 2 மணிக்கு சாதாரண வார்டுக்கு மாற்றுவார்கள் என சொல்லப்படுது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  

Next Story

மன்சூர் அலிகானுக்கு திடீர் உடல்நலக்குறைவு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
mansoor ali khan in hospitalized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. 

அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை இன்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெறுகிறது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் வேலூர் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுகிறார் மன்சூர் அலி கான். பலாப்பழ சின்னத்தில் போட்டியிடும் அவர், தொடர்ச்சியாக காய்கறி மார்க்கெட், மீன் மார்க்கெட் என வேலூர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் அவரது வழக்கமான நக்கல் கலந்த பாணியில் பிரச்சாரம் மெற்கொண்டார். 

இதையடுத்து பிரச்சாரத்தின் கடைசி நாளான இன்று வேலூர் குடியாத்தம் பகுதியில் தீவிர பரப்புரையில் ஈடுபட்ட மன்சூர் அலி கானுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அதனால் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் தற்போது அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.