Skip to main content

இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார், அதையும்தாண்டி அரசாங்கமே... நக்கீரன் ஆசிரியர் சம்மன் குறித்த வழக்கறிஞர் பேட்டி

Published on 15/03/2019 | Edited on 15/03/2019

பொள்ளாச்சி பாலியல் கொடூரம் குறித்து நக்கீரன் வெளியிட்ட செய்தியை எதிர்த்து பொள்ளாச்சி ஜெயராமன் வழக்கு தொடர்ந்தார். அதைத்தொடர்ந்து இன்று காலை 11 மணிக்கு நக்கீரன் ஆசிரியரை ஆஜராகக்கூறி சம்மன் அனுப்பியது, மத்தியக்குற்றப்பிரிவின் சைபர் கிரைம் காவல்துறை. அந்த வழக்கில் ஆஜரான வக்கீல் எல். சிவக்குமார் இவ்வாறு கூறினார்.

 

nakkheeran gopal



பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், நக்கீரன் ஆசிரியர்மீது புகாரளித்துள்ளதாக நேற்று மாலை 5 மணிக்கு ஒரு நோட்டீஸ் வந்தது. அதில் நக்கீரன் ஆசிரியர் இன்று காலை 11 மணிக்கு வந்து நீதிமன்றத்தில் ஆஜராகும்படி குறிப்பிடப்பட்டிருந்தது. அவர் ஊரில் இல்லாததால் வர இயலவில்லை, அவரது வழக்கறிஞராக நான் இங்கு வந்து சில சட்ட விளக்கங்களைக் கூறியுள்ளேன். இந்த வழக்கில் அவர் அளித்துள்ள புகாரில், அவரையும், அவரது குடும்பத்தையும் பற்றி அவதூறான செய்திகள் பரப்பப்பட்டிருப்பதாக கூறியுள்ளார். அப்படி அது அவதூறான செய்தியாக இருந்திருந்தால், சட்டப்படி அவர் மானநஷ்ட வழக்கோ, இழப்பீடு கேட்டோதான் வழக்கு தொடர முடியும். 
 

மேலும் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி உத்தரவிட்டுள்ளார். அதையும்தாண்டி அரசாங்கமே அதை சிபிஐக்கு மாற்றியுள்ளது. அவர்கள் இருவரும் விசாரித்துக்கொண்டிருக்கும்போது, இந்த வழக்குக்கு சம்பந்தமில்லாத சென்னையில், விசாரணைக்கு அழைப்பது சில சந்தேகங்களை எழுப்பியுள்ளது. அதனால் இந்த சம்மனை திரும்பப் பெறுங்கள், இந்த சம்மன் சட்டப்படி செல்லாது அப்படினு சொல்லிருக்கோம். அதை அவர்கள் வாங்கிவிட்டு இது சம்மந்தமாக நாங்கள் தகவல் தெரிவிக்கிறோம் எனக் கூறியுள்ளனர்.
 

எஃப்.ஐ.ஆர். இதுவரை பதியப்படவில்லை அப்படினு சொல்லிட்டாங்க. புகாரைப் படிக்கவேண்டுமெனக் கேட்டபோது அதைத்தரவில்லை. புகார் இருப்பதாகக் கூறுகிறார்கள், புகாரை நாங்கள் பார்க்கவும் இல்லை. பொள்ளாச்சி ஜெயராமன் புகாரளித்துள்ளார். இந்த சம்மனை நீங்கள் அனுப்ப முடியாது, இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கிறது. டிஜிபியும், அரசும் ஒரு முடிவெடுத்திருக்கிறார்கள். அவர்களைமீறி இப்படி செய்யமுடியாது எனக் கூறியுள்ளேன்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.

Next Story

பள்ளிக்கரணை ஆணவக்கொலை சம்பவத்தில் மீண்டும் அதிர்ச்சி; உயிரை மாய்த்த காதலி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
nn

சென்னையில் சில மாதங்களுக்கு முன்பு காதல் திருமண எதிர்ப்பால் இளைஞர் ஒருவர் ஓட ஓட வெட்டி ஆணவக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில் கொலையான இளைஞனின் காதல் மனைவியும் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை பள்ளிக்கரணை பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இங்குள்ள ஜல்லடையான்பேட்டை ஷர்மிளா என்ற பெண்ணை கடந்த சில வருடங்களாக பிரவீன் காதலித்து வந்துள்ளார். கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் பிரவீன்-சர்மிளா இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டார் தரப்பிலும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில் எதிர்ப்பை மீறி இந்தத் திருமணமானது நடைபெற்றது.

காதல் திருமணத்தை தொடர்ந்து அதே பகுதியில் அவர்கள் வசித்து வந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி ஷர்மிளாவின் சகோதரன் தினேஷ் மற்றும் நண்பர்கள் சேர்ந்து இரவு அந்தப் பகுதியில் இளைஞர் பிரவீன் அமர்ந்திருந்தபோது அவரை சரமாரியாக பயங்கர ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். படுகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞர் பிரவீன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். போலீசார் விசாரணையில் நடந்தது ஆணவக் கொலை என்பது உறுதியானது. கொலையில் ஈடுபட்ட பெண்ணின் சகோதரர் தினேஷ் உட்பட நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

nn

இதனையடுத்து, மேலும் அதிர்ச்சி தரும் விதமாக பிரவீனின் காதல் மனைவி ஷர்மிளாவும் உயிரிழந்துள்ளார். காதல் கணவன் கொலை செய்யப்பட்டதால் ஷர்மிளா மன உளைச்சலில் இருந்த நிலையில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். உடனடியாக மீட்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் கடந்த 9 நாட்களாக கோமா நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ஷர்மிளா, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் தன்னுடைய காதல் கணவன் கொல்லப்பட்டது குறித்தும், தன்னுடைய தற்கொலை முடிவு குறித்தும் ஷர்மிளா கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், 'அவன் இல்லாத லைஃப் எனக்கு வேண்டாம். நானும் அவன் கூடவே போறேன்' என உருக்கமாக எழுதியுள்ளதோடு கொலைக்கு காரணமானவர்களின் பெயர்களையும் ஷர்மிளா குறிப்பிட்டுள்ளார்.

ஆணவக் கொலை செய்யப்பட்டு இளைஞர் உயிரிழந்த சம்பவத்தில் காதலியும் தற்கொலை செய்துகொண்டது அங்கு பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.