Skip to main content

திண்டுக்கல் அரசு கல்லூரியில் சேரும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை அமைச்சர் சக்கரபாணியே ஏற்கிறார்

Published on 19/08/2022 | Edited on 19/08/2022

 

Minister Chakrapani himself accepts the tuition fee of students joining Dindigul Government College!

 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டத்திற்கு நான்கு கல்லூரிகளை முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். அதில் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு இரண்டு கல்லூரிகள் ஒதுக்கப்பட்டது. இதில் ஒரு கல்லூரி கள்ளிமந்தயம் அருகே செயல்பட்டு வருகிறது. அதுபோல் மற்றொரு கல்லூரி ஒட்டன்சத்திரம் ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி மையத்தில் இயங்கி வருகிறது. இந்த அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேரும் மாணவ மாணவியருக்கான முதலாம் ஆண்டு கல்விக் கட்டணம் அமைச்சரும், திமுக திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலாளருமான சக்கரபாணி சார்பாக செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

இது தொடர்பாக திண்டுக்கல் மேற்கு மாவட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேரும் மாணவ மாணவியருக்கான முதலாம் ஆண்டு கல்விக் கட்டணம் அமைச்சர் சக்கரபாணி சார்பாக செலுத்தப்படும். எனவே மாணவ மாணவியர் முதல் ஆண்டு கல்விக் கட்டணம் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை. 

 

இணையதளத்தில் விண்ணப்பம் பதிவு செய்யாதவர்களும் நேரடியாக கல்லூரியில் சேர்ந்து கொள்வதற்கு உணவு மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, உயர் கல்வித்துறை இயக்குநரிடம் பேசி அனுமதி பெற்று வழங்கியுள்ளார். எனவே இணையதளத்தில் பதிவு செய்யாதவர்களுக்கான விண்ணப்ப படிவங்கள் கல்லூரியில் வழங்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“அதிக ஓட்டு வாங்கித் தரும் பொறுப்பாளர்களுக்கு பரிசு கொடுக்கப்படும்” - அமைச்சர் சக்கரபாணி

Published on 23/03/2024 | Edited on 23/03/2024
 Prizes will be given to those in charge who get the most votes says Minister sakkarapani

இந்தியா கூட்டணி சார்பில் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சச்சிதானந்தம் போட்டியிடுவதின் பேரில் தொகுதி முழுக்க ஊழியர் கூட்டம் ஒருபக்கம் நடந்துகொண்டு வருகிறது. அதுபோல் ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதியில் நேற்று இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி தலைமை தாங்கினார். பழனி சட்டமன்றஉறுப்பினர் ஐ.பி.செந்தில்குமார் மற்றும் ஒட்டன்சத்திரம் நகர செயலாளர் வெள்ளைச்சாமி உட்பட கூட்டணி கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர்; கலந்துகொண்டனர். இக்கூட்டத்திற்கு ஒட்டன்சத்திரம் தொகுதியில் இருந்து 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட பொதுமக்கள் சாரை சாரையாக வந்தனர். அவர்களை உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி இருகரம் கூப்பி வரவேற்றார். இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் உணவு மற்றும் உணவு வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி ஆகியோர் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சச்சிதானந்தத்தை பொதுமக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தினார்கள்.

இக்கூட்டத்தில் அமைச்சர் சக்கரபாணி பேசும்போது, திண்டுக்கல் மாவட்டத்தை நாம் தி.மு.க. கோட்டையாக உருவாக்கி இருக்கிறோம். 34 மாத கழக ஆட்சியில் செய்த சாதனைகள் ஏராளம். தமிழக முதல்வரின் சாதனையை இந்தியாவே உற்றுப் பார்க்கிறது. தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடைபெற்று வருகிறது. சொல்லாத வாக்குறுதிகள் அத்தனையையும் நம் முதல்வர் நிறைவேற்றி இருக்கிறார். பெண்களுக்கு செய்த திட்டங்கள் ஏராளம். உரிமைத் தொகை கிடைக்காத தகுதிவாய்ந்த தாய்மார்களுக்கு விரைவில் அத்தொகை கிடைக்க ஏற்பாடு செய்துள்ளேன்.

 Prizes will be given to those in charge who get the most votes says Minister sakkarapani

நூறு நாள் வேலை ஊதியம் ரூபாய் நானூறாக உயர்த்தப்படும் என்ற வாக்குறுதியை முதல்வர் அறிவித்துள்ளார். பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும். ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதிக்கு மட்டும் ரூபாய் ஒரு ஆயிரம் கோடி குடிநீர் பணிகளுக்கு ஒதுக்கப்பட்டு இன்னும் ஆறு மாதங்களில் அது பயன்பாட்டிற்கு வரும். இதுமூலமாக வீடுதோறும் குடிநீர் இணைப்பு கிடைக்கும். ஏழு கலைக் கல்லூரிகள் பெற்ற மாவட்டமாக திண்டுக்கல் மாவட்டம் விளங்குகிறது. தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட 12 நகராட்சிகளில் தூய்மையான முதல் நகராட்சியாக ஒட்டன்சத்திரம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. நியாயவிலைக்கடைகளில் தரமான அரிசி வழங்கப்படுகிறது. கடந்த தேர்தலில் 98ஆயிரம் கூடுதலாக வாங்கியிருந்தோம். ஆனால், இந்த தேர்தலில் ஒன்றரை லட்சம் ஓட்டுகள் கூடுதலாக வாங்கித் தர வேண்டும். இப்படி கூடுதலாக ஓட்டு வாங்கித் தரும் ஒவ்வொரு பொறுப்பாளர்களுக்கும் திண்டுக்கல் தொகுதியில் நமது ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி சொன்னது போலவே இத்தொகுதிகளிலும் அதிக ஓட்டுக்கள் வாங்கித்தரும் பொறுப்பாளர்களுக்கு பரிசு கொடுக்கப்படும்.  அந்த பரிசை நமது அமைச்சரே உங்களுக்கு வழங்குவார்.

முக்கியமான மூன்று கோரிக்கைகளை மக்களிடத்தில் நாம் சேர்க்க வேண்டும். கூட்டணி கட்சி வேட்பாளராக போட்டியிடும் சிபிஎம் சின்னமான அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தை வீடுதோறும் கொண்டுபோய் சேர்க்க வேண்டும். பா.ஜ.க. துரோகத்தை மக்களிடம் சொல்ல வேண்டும். தமிழக முதல்வரின் சாதனையை விளக்கி பொதுமக்களிடம் சேர்க்க வேண்டும். கழகத்தின் மீது பொதுமக்களிடையே அன்பும், பாசமும் உள்ளது. இந்த பாராளுமன்ற தேர்தலில் இந்தியாவிலேயே அதிக வாக்குகள் வாங்கிய தொகுதியாக திண்டுக்கல் தொகுதி இருக்க வேண்டும். அதற்கு நீங்கள கடுமையாக உழைக்க வேண்டும்” என்று கூறினார்.

இக்கூட்டத்தில் இறுதியாக அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும்போது, “காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்திற்கான நிதி  ஒரு லட்சம் கோடியாக இருந்து வந்தது. ஆனால், பிஜேபி அரசு தற்பொழுது அறுபது ஆயிரம் கோடியாக குறைத்துள்ளது. இதனால் நூறு நாள் வேலை திட்டத்தில் பணிபுரியக்கூடியவர்களுக்கு வேலை குறைக்கப்படுகிறது. அதற்கான கூலியும் முறையாக தரப்படுவதில்லை. மத்தியஅரசு ஜிஎஸ்டி மூலம் பொதுமக்களிடம் இருந்து வரி வசூல் செய்கிறது. மத்திய அரசுக்கு அதிக வரி செலுத்துவதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. ஆனால் மத்திய அரசு தமிழகத்தை வஞ்சிக்கின்றது.

அரசு திட்டங்களுக்கு வழங்க வேண்டிய தொகையை மத்திய அரசு வழங்க மறுத்து வருகிறது மேலும் தமிழக அரசு மீது பொதுமக்கள் மத்தியில் கெட்ட பெயரை  உருவாக்க வேண்டும் என்பதற்காக மத்திய அரசு இது போல் செய்து வருகிறது. ஆனால், அது நடக்காது  தமிழக முதல்வர் ஏழை எளிய நடுத்தர மக்களின் தேவைகளை பூர்த்தி செய்துவருகிறார். மக்களுக்கு என்ன தேவை என கண்டறிந்து அதனை நிவர்த்தி செய்துவருகிறார் இது போல் செய்யக்கூடிய முதல்வர்கள் யாரும் கிடையாது இந்தியாவிலேயே தமிழக முதல்வர் ஒருவர் மட்டுமே. ஆட்சியில் இருந்த அதிமுக கடந்த பத்து ஆண்டுகளில் விவசாயிகளை பட்டினி போட்டது விவசாயிகளுக்கு எதுவும் செய்யவில்லை ஆட்சி முடிய போற நேரத்தில் ஓட்டு வாங்க வேண்டும் என்பதற்காக விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என பேருக்கு சொல்லிவிட்டு சென்றனர். ஆனால், தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நிதி ஆதாரமில்லாத சூழ்நிலையிலும் விவசாயிகளுக்கு ரூ.12 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் திமுக எம்.எல்.ஏ தொகுதிகளுக்கு முறையாக நிதி ஒதுக்கீடு செய்வது கிடையாது. ஆனால், எடப்பாடி பழனிச்சாமி தொகுதிக்கு உட்பட்ட இரண்டு யூனியன்களுக்கு 20 கோடிநிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் உள்ள மக்கள், நம் மக்கள் ஆகையால் அவர்களது தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தமிழக முதல்வர் தேவையான நிதிகளை ஒதுக்கீடு செய்து பணிகளை மேற்கொண்டு வருகின்றார். மத்தியில் இந்த முறை கண்டிப்பான முறையில் ஆட்சி மாற்றம் என்பது நடைபெறும். ஆகையால் நாங்கள் கொடுக்கக்கூடிய வாக்குறுதிகள் அனைத்தும் முழுமையாக நிறைவேற்றப்படும் என்று கூறினார்.

Next Story

“முதல்வர் பொற்கால ஆட்சியை நடத்தி வருகிறார்” - அமைச்சர் சக்கரபாணி

Published on 17/02/2024 | Edited on 17/02/2024
 CM stalin is running a golden age says  Minister sakkarapani

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ், 562 பயனாளிகளுக்கு ரூ.76.77 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பொது மக்களுக்கு வழங்கினார்.

இந்த விழாவில், அமைச்சர் சக்கர பாணி பேசிய போது, “தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து, அந்த திட்டங்களின் பயன்கள் கடைக்கோடி கிராமங்களில் வசிக்கும் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடையும் வகையில் செயல்படுத்தி வருகிறார்கள். பொதுமக்களின் சுகாதாரத்தை பாதுகாப்பதற்காக கழிவுநீர் வாய்க்கால்கள், பொது சுகாதார வளாகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்களுக்கு பாதுகாப்பான சாலை பயணத்தை வழங்கும் வகையில் சாலை வசதிகள் மற்றும் போக்குவரத்து வசதிகளை மேம்படுத் துவதற்காக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 

மழை, வெயில் காலங்களில் பயணிகளை பாதுகாக்கும் வகையில் தேவைப்படும் இடங்களில் பயணிகள் நிழற்குடைகள் அமைக்கப்பட்டு வருகிறது. அரசின் சேவைகள் விரைவாகவும், எளிதாகவும் பொதுமக்களுக்கு சென்று சேரும் வண்ணம் மக்களுடன் முதல்வர் என்ற புதிய திட்டம்  தமிழ்நாடு  முதலமைச்சர் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் நடைபெற்ற முகாம்களில் பெறப்பட்ட அனைத்து மனுக்களும் சம்மந்தப்பட்ட துறையினரால் பரிசீலனை செய்யப்பட்டு 30 நாட்களுக்குள் தகுதியின் அடிப்படையில் தீர்வு காணப்பட்டுள்ளன. இத்திட்டத்தில் அதிக எண்ணிக்கையிலான பொதுமக்கள் மனுக்கள் அளித்து தீர்வு கண்டு பயனடைந்துள்ளனர். தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

அதனைத்தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி, ஒட்டன்சத்திரம் வட்டத்தில் 79 பயனாளிகளுக்கும், பழனி வட்டத்தில் 123 பயனாளிகளுக்கும், மின்சாரவாரியம் சார்பில் 185 பயனாளிகளுக்கும், ஒட்டன்சத்திரம் நகராட்சி சார்பில் 43 பயனாளிகளுக்கும், தொழிலாளர் நலவாரியம் சார்பில் 7 பயனாளிகளுக்கும், வேளாண் மைத்துறை சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.1.27 இலட்சம் மதிப்பீட் டிலும், தமிழ்நாடு முதலமைச்சர் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் 15 பயனாளிகளுக்கு ரூ.75.00 இலட்சம் மதிப்பீட்டிலும், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் 105 பயனாளிகளுக்கு ரூ.50,000 மதிப்பீட்டிலும் என மொத்தம் 562 பயனாளிகளுக்கு ரூ.76.77 இலட்சம் மதிப்பீ ட்டிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு இருக்கிறது. 

தமிழ்நாடு முதலமைச்சர், மாநில அரசு நிதியிலிருந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, பொற்கால ஆட்சியை நடத்தி வருகிறார். மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையை ரூ.1500-லிருந்து ரூ.2000-ஆக உயர்த்தியும், முதியோர் உதவித்தொகையை உயர்த்தியும் வழங்கப்படுகிறது. பொதுமக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கவும், வீடு இல்லாத ஏழை, எளிய மக்களுக்கு வீடு கட்டி வழங்கும் திட்டமும் செயல்படு த்தப்படுகிறதுகுடும்ப அட்டை கோரி விண்ணப்பித்தால் தகுதியுள்ள மனுக்கள் மீது 15 நாட்களுக்குள் நடவடிக்கை மேற்கொண்டு குடும்ப அட்டை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது” என்று கூறினார்.