Skip to main content

ஆன்மிக ஸ்தலங்களுக்குச் செல்ல ஆசைப்படும் ஆட்சியாளர்கள்! 

Published on 09/05/2020 | Edited on 09/05/2020

 

kovil


மே 17-க்குப் பிறகாவது ஊரடங்கு நீட்டிக்கப்படுமா? அல்லது விலக்கிக் கொள்ளப்படுமா? என்பதில் மக்கள் கவலையடைந்திருக்கும் சூழலில், ஆட்சியாளர்கள் பலரும் ஆன்மிக ஸ்தலங்களுக்குச் செல்ல திட்டமிடுகிறார்கள். 
 

குறிப்பாக, பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கைய்யா நாயுடு உள்பட மத்திய அமைச்சர்கள் பலரும், ஊரடங்கு முடிவுக்கு வந்ததும் முதல் கட்டமாக, ஆன்மிக நகரங்களை நோக்கி பயணிக்கத் திட்டமிடுகிறார்கள். 
 

இது குறித்து மத்திய அமைச்சர்கள் பலரும் எந்த நகரங்களுக்குச் செல்வது என விவாதித்துக் கொள்கிறார்களாம். குறிப்பாக, வாரணாசிக்குச் செல்ல பிரதமர் மோடி விரும்புவதாக டெல்லியிலிருந்து தகவல் கசிந்துள்ளது. துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு உள்பட மத்திய அமைச்சர்கள் சிலர், திருப்பதி வெங்கடாஜலபதியைத் தரிசனம் செய்ய விரும்புதாகவும் டெல்லி தகவல்கள் கூறுகின்றன. அதேபோல, தமிழக முதல்வர் எடப்பாடி, துணை முதல்வர் ஓபிஎஸ் உள்ளிட்டவர்களும் திருப்பதிக்குச் செல்ல திட்டமிடுகின்றனர்.  

 

சார்ந்த செய்திகள்

Next Story

கதிகலங்க வைக்கும் ஜட்டி திருடர்கள்; பயத்தில் உறைந்த மக்கள்

Published on 14/11/2023 | Edited on 14/11/2023
Infuriating Jatti Thieves; People frozen in fear

 

பல விதமான நூதன முறைகளில் திருட்டு சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில் திருட்டு சம்பவங்களில் துப்பு துலக்க சிசிடிவி காட்சிகள் முக்கிய பங்காற்றி வருகிறது. பிடிபட்டால் சிக்காமல் இருக்க உடலில் எண்ணெய்யை பூசிக்கொண்டு சில மர்ம நபர்கள் திருட்டில் ஈடுபட்ட சம்பவம் அண்மையில் மதுரையில் நிகழ்ந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.  

 

இந்நிலையில் ஆந்திராவில் திருப்பதி பகுதியில் ஜட்டியுடன் உலாவும் சில மர்ம நபர்கள் திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. ஜட்டி அணிந்தபடி உலாவும் சில நபர்கள் திருட்டில் ஈடுபடுவதாக போலீசருக்கு பல இடங்களில் இருந்து புகார்கள் வந்தன. இதனைத் தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து பார்த்ததில், ஜட்டியுடன் சில நபர்கள் தங்கள் உடலில் டார்ச் லைட்டை  மாட்டியபடி நோட்டமிடுவது தெரியவந்தது.

 

அண்மையில் கார் ஷோரூமில் இந்த ஜட்டி திருட்டு கும்பல் கொள்ளையடிக்க முயன்ற காட்சிகளை கைப்பற்றிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஜட்டியுடன் சுற்றித் திரியும் அந்த நபர்கள் முகத்தில் முகமூடி அணிந்து கொண்டு இருப்பதால் அடையாளம் காண்பது போலீசாருக்கு சிரமத்தை கொடுத்துள்ளது. குறிப்பாக திருப்பதியின் புறநகர்ப் பகுதிகளில் உள்ள வீடுகளைக் குறிவைத்து இவர்கள் கொள்ளையை அரங்கேற்றுகின்றனர். இதனால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனக் காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

 

Next Story

இலவச தரிசன டிக்கெட் ரத்து; ஒரு நாளுக்கு மேலாக காத்திருக்கும் பக்தர்கள்

Published on 01/10/2023 | Edited on 01/10/2023

 

Cancellation of Free Darshan Tickets; Devotees who have been waiting for more than a day


புரட்டாசி மாதத்தை ஒட்டி ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கூட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று சனிக்கிழமை என்பதால் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது. தொடர்ந்து கூட்டம் அதிகரித்ததால் நேற்று மாலை 6 மணி முதல் இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டது. இதனால் இன்று காலை முதல் பக்தர்கள் வரிசையில் நின்று வருகின்றனர்.

 

நேற்று ஒரே நாளில் 87 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ததாகவும் நான்கு கோடியே 5 லட்சம் ரூபாய் உண்டியல் காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளதாகவும் திருப்பதி தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 300 ரூபாய் டோக்கன் பெற்ற பக்தர்கள் 5 லிருந்து 6 மணி நேரமும், இலவச தரிசனத்திற்கு காத்திருக்கும் மக்கள் 24 மணி நேரத்திற்கு மேலாகவும் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.