Skip to main content

மாவட்ட எல்லையில் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, அனுமதிச் சீட்டு முறையைக் கைவிட வேண்டும் என ஈஸ்வரன் கோரிக்கை!

Published on 12/05/2020 | Edited on 12/05/2020

 

eswaran er


மாவட்ட எல்லைகளில் கடைப்பிடிக்கும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட வேண்டும். அனுமதிச் சீட்டு பெறுகின்ற முறை கைவிடப்பட வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் தமிழக அரசைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:-
 

மத்திய மாநில அரசுகள் மார்ச் 24- ஆம் தேதி உத்தரவிட்ட ஊரடங்கைக் கொஞ்சம் கொஞ்சமாகத் தளர்த்தி வருகிறார்கள். அத்தியாவசியத் தேவைகள் தாண்டி பல்வேறு பொருளாதார நடவடிக்கைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டிருக்கிறது. தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க பல்வேறு தொழிற்சாலைகள் இயங்க ஆரம்பித்திருக்கின்றன. மாவட்டத்திற்குள் மக்களுடைய நடமாட்டம் கட்டுப்பாடுகளுடன் அனுமதிக்கப்பட்டு இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் மாவட்ட எல்லைகளில் மக்கள் தடுத்து நிறுத்தப்படக்கூடாது. பல்வேறு அத்தியாவசியத் தேவைகளுக்குப் பக்கத்து மாவட்டத்திற்குள் செல்ல வேண்டிய அவசியம் சாதாரண மக்களுக்கு இருக்கிறது.
 

1. மருத்துவத் தேவைகளுக்காகப் பக்கத்து மாவட்டங்களுக்குச் செல்வதற்கு எல்லைகளைத் தாண்ட வேண்டியிருக்கிறது.
 

2. இயங்குகின்ற தொழிற்சாலைகளுக்குத் தொழிலாளர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல வேண்டியிருக்கிறது.
 

3. விவசாய கூலித் தொழிலாளர்கள் மாவட்ட எல்லை தாண்ட வேண்டியிருக்கிறது.
 

4. உற்பத்தியாகின்ற விவசாய விளைபொருட்களை விற்பனைக்காக பக்கத்து மாவட்டத்திற்கு எடுத்துச் செல்ல வேண்டியிருக்கிறது.
 

5.  அடுத்த மாவட்டத்தில் உள்ள தாய் தந்தையரை பார்ப்பதற்குப் பிள்ளைகள் செல்ல வேண்டியிருக்கிறது. பார்க்காமல் பல பெற்றோர்கள் மன அழுத்தத்தில் இருக்கிறார்கள்.
 

6. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல அனுமதிக்கும் அனுமதிச் சீட்டுகள் பெறுவதற்குக் காலதாமதமாகிறது.

 

 

இப்படிப் பல அத்தியாவசியத் தேவைகளுக்கு சாதாரண மக்கள் மாவட்ட எல்லைகளைக் கடக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. பொருளாதார நடவடிக்கைகளுக்காக பல தொழிற்சாலைகள், கடைகள் திறப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டு இருந்தாலும் மாவட்ட எல்லைகளில் கட்டுப்பாடுகள் நிலவுவதால் 50 சதவீத பொருளாதார நடவடிக்கைகள் தடைபடுகிறது. எந்த மாவட்டமாக இருந்தாலும் பாதிக்கப்பட்ட வீடுகளை மட்டும் தனிமைப்படுத்தி விட்டு மற்ற பகுதிகளில் அனைத்து நடவடிக்கைகளையும் தொடர அனுமதிக்க வேண்டும். இந்த வகையில் மாவட்ட எல்லைகளைத் தாண்டிச் செல்ல வேண்டியது அத்தியாவசியமாக மாறி இருக்கிறது. திரையரங்குகள், பெரிய வணிக வளாகங்கள், திருமண மண்டபங்கள், மதுபானக் கடைகள் எங்கும் திறக்கப்படாததால் மாவட்ட எல்லைகளைத் தேவையில்லாமல் கடப்பவர்கள் இருப்பதற்கான வாய்ப்பு இல்லை. அதனால் இன்றைய சூழ்நிலையில் மாவட்ட எல்லைகளில் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி போக்குவரத்தை அனுமதிக்க வேண்டும். அனுமதிச் சீட்டு பெறுகின்ற முறையும் கைவிடப்பட வேண்டும்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சற்றே குறைந்த கொரோனா பரவல்; மத்திய சுகாதார அமைச்சகம் தகவல்

Published on 02/01/2024 | Edited on 02/01/2024
Slightly less corona spread; Information from Union Ministry of Health

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகை கொரோனாவான ஜேஎன் 1 கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், கடந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. அதேபோல், கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. மேலும், ஒரே நாளில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்தது.

இந்த நிலையில், நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் நேற்று முன்தினம் (31-12-23) 841 ஆக இருந்த கொரோனா தொற்று நேற்று (01-01-24) 636 ஆக குறைந்திருக்கிறது என்று தெரிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4.5 கோடியை தாண்டியுள்ளதாகவும், நாடு முழுவதும் இதுவரை 5.33 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு; உயரும் பலி எண்ணிக்கை!

Published on 01/01/2024 | Edited on 01/01/2024
Increasing Corona Virus; Rising toll

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவிலிருந்து பரவிய கொரோனா நோய்த் தொற்று உலகமெங்கும் பெருந்தொற்றாக மாறி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நோய்த் தொற்றால் உலகமெங்கும் ஏராளமானோர் பலியானார்கள். அதன் பின்பு, கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள், மாஸ்க், தடுப்பூசி போன்ற முயற்சிகளால் கொரோனா பாதிப்பு தற்போது கட்டுக்குள் வந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக புதிய வகையான கொரோனாவான ஜேஎன் 1 வகை கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. அதில் இந்தியாவில் மட்டும் கடந்த மாதம் 479 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில், இந்த மாதத்தின் (டிசம்பர்) முதல் 8 நாட்களில் மட்டும் 825 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களில் 90% பேர் கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த கேரளா மட்டுமல்லாது மற்ற மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில் 423ஆக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த 23 ஆம் தேதி 752ஆக அதிகரித்திருந்தது. அதன்படி, இந்தியாவில் மட்டும் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,997இல் இருந்து 3,240ஆக அதிகரித்தது. இதில் கேரளாவில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக 565 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. மேலும், இந்தியாவில் மட்டும் ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது.

இதையடுத்து, கடந்த டிசம்பர் மாதம் 29 ஆம் தேதி, இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 797 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்தது. அதே சமயம், ஒரே நாளில் கேரளாவில் 2 பேர், மகாராஷ்டிரா, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தலா ஒருவர் என மொத்தம் 5 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சி தகவல் வெளியாகியிருந்தது. 

இந்த நிலையில், நேற்று (31-12-23) வரையிலான 24 மணி நேரத்தில் 841 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கேரளா, கர்நாடகா, பீகார் ஆகிய மாநிலங்களில் தலா ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.