Skip to main content

‘தோல்விக்கு காரணம் இது தான்’ - பா.ஜ.க மீது ஏக்நாத் ஷிண்டே பரபரப்பு குற்றச்சாட்டு!

Published on 12/06/2024 | Edited on 12/06/2024
Eknath Shinde sensational accusation against BJP

நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில், அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தாலும், கூட்டணிக் கட்சிகளின் தயவால் பா.ஜ.க கூட்டணி மூன்றாவது முறையாக ஆட்சியை அமைத்தது. 

ஆட்சி அமைக்க தனிப்பெரும்பான்மை இல்லாத பா.ஜ.கவுக்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த சந்திரபாபு நாயுடுவும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த நிதிஷ்குமாரும் ஆதரவு தருவதாக உறுதி அளித்தனர். அதன்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி தலைமையில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளார். 

இருப்பினும், பா.ஜ.கவின் கோட்டையாக இருக்கக்கூடிய உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களின் கூட காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. அந்த வகையில், மொத்தம் 48 மக்களவைத் தொகுதிகள் கொண்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி 30 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. பா.ஜ.க 9 இடங்களைக் கைப்பற்றியிருந்தது. பா.ஜ.க கூட்டணியில் உள்ள சிவசேனா 7 இடங்களிலும், அஜித்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி 1 இடங்களிலும் வெற்றி பெற்று இருந்தது. அதனால், மகாராஷ்டிராவில் பா.ஜ.கவிற்கு ஏற்பட்ட தோல்வியால் மகாராஷ்டிரா துணை முதல்வராக உள்ள பா.ஜ.கவின் மூத்த தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ், தனது துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளார் எனத் தகவல் வெளியானது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில், பா.ஜ.க கூட்டணியில் உள்ள சிவசேனா கட்சியின் தலைவரும், மகாராஷ்டிரா முதல்வருமான ஏக்நாத் ஷிண்டே பா.ஜ.க மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “பொய்யான கதைகள் கட்டமைக்கப்பட்டதால் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் போது சில இடங்களில் தோல்வியை சந்தித்தோம்.  மகாராஷ்டிராவில் நாங்கள் தோல்வியை சந்தித்தோம். எதிர்க்கட்சிகள் அரசியல் சாசனம் மாற்றப்படும், இடஒதுக்கீடு நீக்கப்படும் என்று பொய்யான கதையை கூறினர். ஆனால் உண்மையில் அப்படி எதுவும் நடக்கப் போவதில்லை. 400 இடங்களை வெல்வோம் என்ற முழக்கம் மக்களிடையே தவறான எண்ணங்களை உருவாக்கியுள்ளது. மேலும், அந்த முழக்கம் எதிர்காலத்தில் பிரச்சனைகளை உருவாக்கும் என்ற அச்சத்தை மக்கள் மனதில் எழுப்பியுள்ளது” என்று கூறினார். 

மக்களவைத் தேர்தல் பரப்புரையின் போது, பா.ஜ.க அதிக பெரும்பான்மையுடன் 400 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்கும் என்றும், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவார்கள் என்றும் பா.ஜ.கவினர் கூறி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்

 

Next Story

ஐஸ்கிரீமுக்குள் மனித விரல்; பெண்ணுக்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 13/06/2024 | Edited on 13/06/2024
Human finger in ice cream at maharashtra

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையின் மலாட் பகுதியில் உள்ள பெண் ஒருவர், ஆன்லைனின் ஐஸ்கிரீம் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார். அதன்படி, ஐஸ்கிரீம் அந்தப் பெண்ணின் கைக்கு வந்துள்ளது. ஐஸ்கிரீம் கவரை பிரித்த பார்த்த போது, அதில் மனித விரலின் துண்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். 

இதனையடுத்து, இந்தச் சம்பவம் குறித்து அந்தப் பெண் மலாட் காவல் நிலையத்தை அணுகி புகார் அளித்தார். புகாரின் பேரில், ஐஸ்கிரீம் நிறுவனமான யும்மோ ஐஸ்கிரீம் நிறுவனத்திற்கு எதிரான வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ஐஸ்கிரீமுக்குள் கண்டெடுக்கப்பட்ட மனித உறுப்பை பரிசோதனைக்காக தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பியுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர். 

ஆன்லைனில் ஆர்டர் செய்த ஐஸ்கிரீம் கூம்புக்குள் மனித விரலின் துண்டை கண்டெடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

‘தேர்தல் பேச்சுகளிலிருந்து விடுபட வேண்டும்’ - பா.ஜ.க மீது ஆர்.எஸ்.எஸ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு

Published on 13/06/2024 | Edited on 13/06/2024
RSS accuses BJP

நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தலின் முடிவு கடந்த 4 ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றது. இதில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ஜ.க கூட்டணிக் கட்சிகளோடு இணைந்து மூன்றாவது ஆட்சி அமைத்துள்ளது. அதன்படி, கடந்த 9ஆம் தேதி பிரதமர் மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றார். 

தேசிய அளவில் பா.ஜ.க பல இடங்களில் வெற்றி பெற்றியிருந்தாலும், சில மாநிலங்களில் தோல்வியை அடைந்துள்ளது. இதனால், பல முக்கிய பா.ஜ.க தலைவர்கள் அதிருப்தியில் உள்ளனர். அந்த வகையில், ஆர்.எஸ்.எஸ் இயக்கம் பா.ஜ.கவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூர் பகுதியில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாம் நிறைவு விழா நடைபெற்றது. அந்த விழாவில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், “மணிப்பூரின் நிலைமையை முன்னுரிமையுடன் மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். தேர்தல் பேச்சு வார்த்தைகளில் இருந்து விடுபட்டு தேசம் எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் கவனம் செலுத்த வேண்டும்” என்று கூறினார்.

அதே போல், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் மூத்த தலைவர் ரத்தன் ஷர்தா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், ‘தேர்தலில் வாக்களிக்குமாறு மக்களிடம் கேட்பதை விட ஆர்.எஸ்.எஸ்-ஐ அணுக வேண்டிய பொறுப்பு பா.ஜ.கவுக்கு உள்ளது. செல்ஃபி இயக்க ஆர்வலர்களால் அங்கீகாரத்திற்கான உந்துதல் இல்லாமல் உழைத்த வயதான அர்ப்பணிப்புள்ள தொழிலாளர்கள் புறக்கணிக்கப்படுவது தெளிவாகத் தெரிகிறது. பா.ஜ.க தலைவர்கள் மட்டுமே உண்மையான அரசியலைப் புரிந்துகொள்கிறார்கள், ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் முட்டாளாக இருந்தார்கள் என்ற தவறான அகங்காரம் சிரிப்பதற்குத் தகுதியானது. சிறப்பாகச் செயல்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கூட தியாகம் செய்து, பின்னர் வந்தவர்களைக் காயப்படுத்துவது போன்ற காரணத்தினால்தான் உள்ளூர் பாஜக தொண்டர்கள் ஆர்வமின்மையாக இருக்கின்றனர். 

இதற்கு மகாராஷ்டிரா ஒரு சிறந்த உதாரணம். ஏற்கனவே பா.ஜ.க மற்றும் பிளவுபட்ட சிவசேனா பெரும்பான்மையைப் பெற்றிருந்தது. ஆனால், அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் பிரிவு பா.ஜ.கவில் இணைந்தது. உறவினர்களுக்கு இடையேயான உட்கட்சி சண்டையால் இரண்டு மூன்று ஆண்டுகளில் சரத் பவார் மறைந்திருப்பார். தேசியவாத காங்கிரஸ் ஆற்றலை இழந்திருக்கும். ஏன் இந்த தவறான நடவடிக்கை எடுக்கப்பட்டது? காங்கிரஸ் சித்தாந்தத்திற்கு எதிராக பல ஆண்டுகளாகப் போராடித் துன்புறுத்தப்பட்டதால் பா.ஜ.க ஆதரவாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரே அடியில் பாஜக தனது பிராண்ட் மதிப்பைக் குறைத்து கொண்டது. மகாராஷ்டிராவில் பல வருட போராட்டத்திற்குப் பிறகு, காங்கிரஸ் எந்த வித்தியாசமும் இல்லாமல் மற்றொரு அரசியல் கட்சியாக மாறியுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளார்.