Skip to main content

‘3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு’ - வானிலை ஆய்வு மையம் தகவல்

Published on 01/02/2024 | Edited on 01/02/2024
'Chance of rain in 3 districts' - Meteorological Department information

வடகிழக்கு பருவமழையின் தொடர்ச்சியாக தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் சில பகுதிகளில் அவ்வப்போது மழை பொழிந்து வருகிறது. அதன்படி தமிழகத்தில் 3 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தமிழகத்தின் தென் மாவட்டங்களான மதுரை, விருதுநகர் மற்றும் தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமான, இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழையும், தூத்துக்குடியின் மாநகர பகுதிகளில் சாரல் மழையும் பெய்து வருகிறது. பிப்ரவரி மாதத்தில் பெய்யும் பருவம் தவறிய மழையால் தூத்துக்குடியில் உப்பள தொழில்களை பாதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

சார்ந்த செய்திகள்