Skip to main content

தி.மு.க.-வினர் நடத்திய பிறந்தநாள் பார்ட்டி! 50 பேருக்கு கரோனா! அதிரடி காட்டிய போலீஸ்!

Published on 22/06/2020 | Edited on 22/06/2020

 

சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் கரோனா தொற்று அதிகம் பாதித்து வரும் நிலையில், இது குறித்து எவ்வித கவலையுமின்றி கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த தி.மு.க. பொதுக்குழு உறுப்பினரும், ஒன்றிய குழு துணைத் தலைவருமான குணசேகர் இரண்டு நாட்களுக்கு முன்பு தனது தோட்டத்தில் 50-ஆவது பிறந்த நாளை தடபுடலாகக் கொண்டாடியிருக்கிறார்.

 

செம்மரக் கடத்தல் கும்பலைச் சேர்ந்த ரவுடிகள் பலர் இந்த பார்ட்டியில் கலந்து கொண்டனர். மதுபாட்டில்களோடு அசைவ விருந்துகளுடன் பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார் தி.மு.க. குணசேகர்.  

 

ஊரடங்கை மீறியும் கரோனா பரவல் குறித்த எச்சரிக்கையை உதாசீனப்படுத்தியும் குணசேகர் நடத்திய இந்தக் கொண்டாட்டம் தி.மு.க.-வில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

 

தி.மு.க.-வைச் சேர்ந்த திருவள்ளூர் வடக்கு மாவட்டச் செயலாளர் கும்மிடிப்பூண்டி வேணுவின் வலது கரமாக இருப்பவர் குணசேகர். செம்மரக் கடத்தல் தொழிலில் தொடர்புடைய இவர், ஆறு வருடங்களுக்கு முன்பு செம்மரக் கடத்தல் வழக்கில் சிறைச் சென்றிருக்கிறார். தி.மு.க. பொதுக்குழு உறுப்பினராகவும், கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு துணைத் தலைவராகவும் இருக்கிறார் குணசேகர். 

 

இந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு கும்மிடிப்பூண்டியில் உள்ள தனது தோப்பில் 500 - க்கும் மேற்பட்ட ரவுடிகள் மற்றும் செம்மரக் கடத்தல் தொழில் செய்பவர்களுடன் தனது 50-ஆவது பிறந்த நாளை வெகு விமரிசையாகக் கொண்டாடியுள்ளார். 

 

200-க்கும் அதிகமான மதுபாட்டில்கள், பிரியாணி, மட்டன், சிக்கன் எனத் தடபுடலாக நடைபெற்ற அந்த விருந்து கொண்டாட்டத்தில் தி.மு.க. மாவட்டச் செயலாளர் வேணுவின் மகன் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். மேலும், அ.தி.மு.க. சேர்மன் சிவக்குமார் மற்றும் குணா ஆகியோரும் விருந்தில் கலந்துகொண்டனர். 

 

இந்த நிலையில், பிறந்த நாள் கொண்டாடிய குணசேகருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அந்த பார்ட்டியில் கலந்து கொண்ட ரவுடி உட்பட தி.மு.க. நிர்வாகிகள் 15 பேருக்கும் கரோனா தொற்று தாக்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தச் செய்தி அறிந்து பிறந்த நாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட அனைவரையும் கரோனா பயம் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. 

 

இந்த வில்லங்கம், தி.மு.க. தலைமைக்கும் பொது வெளியிலிலும் தெரிந்தால் தனக்கு சிக்கலாகி விடும் எனக் கருதி, அனைவரையும் தலைமறைவாக இருக்கச் சொல்லியிருக்கிறாராம் திமுக மாவட்டச் செயலாளர் வேணு.

 

கரோனா தொற்று பரவலைத் தடுக்க தி.மு.க. நிர்வாகிகளுடன் போராடி வரும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின், ஊரடங்கை மீறி இத்தகைய கூத்துகளை நடத்திய குணசேகர் உள்ளிட்ட மாவட்ட தி.மு.க.-வினர் மீது நடவடிக்கை எடுப்பாரா? என திருவள்ளுர் தி.மு.க.-வில் எதிரொலிக்கிறது.  

 

http://onelink.to/nknapp

 

மதுக்கடைகள் திறக்கப்படாத போதும் எப்படி இவர்களுக்கு 200-க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் கிடைத்தது? பார்ட்டியில் கலந்துகொண்ட 500-க்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் அதற்கு யார் பொறுப்பு? இந்த நிலையில், குணசேகர் உள்பட 50 தி.மு.க.-வினர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது ஆரம்பாக்கம் காவல்துறை!  

 

இந்த விவகாரம், திருவள்ளுர் மாவட்ட தி.மு.க.-வில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.