மாதிரிப் படம்
பா.ஜ.க - அ.தி.மு.கவுடனான உறவு வெறும் அரசியல் ரீதியான உறவு மட்டும் அல்ல. சமீபத்தில் நடந்த கர்நாடக தேர்தலுக்கு சென்னையில் இருந்து பணம் கொடுக்கப்பட்டது எனச் செய்திகள் வெளியானது. அதுபோல பீகாரில் தேர்தலைச் சந்திக்கும் பாஜகவிற்காக 300 கோடி ரூபாய் அதிமுக அரசு கொடுத்துள்ளது.
இந்தப் பணத்தை இரண்டு அமைச்சர்கள் கொடுத்திருக்கிறார்கள். இருவரும் அமைச்சரவையில் முக்கியத் துறைகளைச் சேர்ந்தவர்கள். இவர்கள் இருவரும் பணம் கொடுக்க அந்தப் பணம் நோட்டுக் கட்டுக்களாக மாறி கண்டெய்னரில் பீகாருக்குச் சென்றதாக அ.தி.மு.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.