Skip to main content

‘கச்சத்தீவு, மீனவர் பிரச்னை; தமிழக முதல்வருக்கு பதில்’ - மத்திய அமைச்சர் விளக்கம்!

Published on 01/04/2024 | Edited on 01/04/2024
answer to CM MK Stalin says Union Minister for issue of Kachchathivu

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. இத்தகைய சூழலில் கச்சத்தீவு விவகாரத்தை பா.ஜ.க. கையிலெடுத்து காங்கிரசையும்,  திமுகவையும் கடுமையாக விமர்சித்து வருகிறது. இந்நிலையில் கச்சத்தீவு விவகாரம் குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது, “கடந்த 1974 ஆம் ஆண்டில், இந்தியாவும் இலங்கையும் ஒரு கடல் எல்லையை வரைந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன, மேலும் கடல் எல்லையை வரைவதில் கச்சத்தீவு இலங்கையின் எல்லையில் இருக்குமாறு வரையப்பட்டன. காங்கிரஸும், தி.மு.க.வும் இந்த விவகாரத்தில் தங்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை என்பது போல அணுகியுள்ளன. கடந்த 20 ஆண்டுகளில், 6 ஆயிரத்து 184 இந்திய மீனவர்கள் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டனர். 1175 இந்திய மீன்பிடி படகுகள் இலங்கையால் கைப்பற்றப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டன. இன்று விவாதிக்கும் பிரச்சனையின் பின்னணி இதுதான்.

கடந்த ஐந்தாண்டுகளில் கச்சத்தீவு பிரச்சனை, மீனவர் பிரச்சனை என பல்வேறு கட்சிகள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றன. நாடாளுமன்ற கேள்விகள், விவாதங்கள் மற்றும் ஆலோசனைக் குழுவில் இது பற்றி வந்துள்ளன. அப்போதைய தமிழக முதல்வர் எனக்கு பலமுறை கடிதம் எழுதியுள்ளார். தற்போதைய முதல்வரிடம், இந்த பிரச்சனைக்கு 21 முறை பதில் அளித்துள்ளேன் என்பதை எனது பதிவு காட்டுகிறது. இது திடீரென்று தோன்றிய பிரச்சனை அல்ல. இது ஒரு நேரடி பிரச்சனை. இது நாடாளுமன்றத்திலும், தமிழக வட்டாரங்களிலும் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே கடிதப் பரிமாற்றம் நடந்துள்ளது. இப்போது தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு அரசியல் கட்சியும் இதைப் பற்றி ஒரு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. அதற்கு அவர்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை. இன்றைய மத்திய அரசு தீர்த்து வைக்க வேண்டிய சூழல் இருந்தாலும், இதற்கு வரலாறே இல்லை, இது இப்போதுதான் நடந்திருக்கிறது.இவர்கள்தான் போராட்டம் நடத்துகிறார்கள். அப்படித்தான் அவர்கள் அதை முன்னிறுத்த விரும்புகிறார்கள்.

இதை யார் செய்தார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். யார் மறைத்தார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது. இந்த நிலை எப்படி வந்தது என்பதை அறியும் உரிமை பொதுமக்களுக்கு உள்ளது என்று நாங்கள் நம்புகிறோம். இன்று, பொதுமக்கள் தெரிந்து கொள்வதும், மக்கள் தீர்ப்பளிப்பதும் முக்கியம். இந்த பிரச்சனை பொதுமக்களின் பார்வையில் இருந்து நீண்ட காலமாக மறைக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் இலங்கை கடற்படையால் இன்றும் தடுத்து வைக்கப்படுகிறார்கள், படகுகள் இன்னும் பறிமுதல் செய்யப்படுகிறது. இன்னும் இது குறித்து நாடாளுமன்றத்தில் பிரச்சனை எழுப்பப்படுகிறது. அதுவும் இதனைச் செய்த இரு கட்சிகளால் நாடாளுமன்றத்தில் எழுப்பப்படுகிறது. கைது செய்யப்பட்டார், எப்படி விடுவிக்கப்பட்டார்கள் என்று நினைக்கிறீர்கள். சென்னையில் இருந்து அறிக்கை கொடுப்பது மிகவும் நல்லது, ஆனால் வேலை செய்பவர்கள் நாங்கள்தான்.

நாங்கள் 1958 மற்றும் 1960 பற்றி பேசுகிறோம். குறைந்த பட்சம் மீன்பிடி உரிமையாவது எங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று வழக்கின் முக்கிய நபர்கள் விரும்பினர். கச்சத்தீவு 1974 இல் இலங்கைக்கு வழங்கப்பட்டது. 1976 இல் மீன்பிடி உரிமை வழங்கப்பட்டது. ஒன்று, மிக அடிப்படையான தொடர்ச்சியான (அம்சம்) இந்தியாவின் நிலப்பரப்பில் அப்போதைய மத்திய அரசும், பிரதமர்களும் காட்டிய அலட்சியம். அது பற்றி அவர்கள் கவலைப்படவில்லை என்பதுதான். கச்சத்தீவு குறித்து கடந்த மே 1961 இல் நேரு, ‘இந்தச் சிறிய தீவுக்கு நான் எந்த முக்கியத்துவமும் கொடுக்கவில்லை. அதன் மீதான எங்கள் கோரிக்கையை விட்டுக்கொடுக்க எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. இது போன்ற விஷயங்கள் காலவரையின்றி நிலுவையில் இருப்பதும், மீண்டும் மீண்டும் நாடாளுமன்றத்தில் எழுப்பப்படுவதும் எனக்குப் பிடிக்கவில்லை’ எனத் தெரிவித்திருந்தார். எனவே நேருவுக்கு, இது ஒரு குட்டித் தீவு. அதற்கு முக்கியத்துவம் இல்லை, அவர் அதை ஒரு தொல்லையாகப் பார்த்தார். இலங்கைக்கு எவ்வளவு சீக்கிரம் கொடுக்கிறீர்களோ, அவ்வளவு நல்லது. இந்த பார்வை இந்திரா காந்திக்கும் தொடர்ந்தது” எனத் தெரிவித்தார். 

சார்ந்த செய்திகள்

Next Story

முதல்வரிடம் மனு கொடுக்க முயன்ற பாஜக நிர்வாகியால் பரபரப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A BJP executive who tried to petition the Chief Minister stalin

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி உள்ளது. இதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கிடையே தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் 22 ஆம் தேதி திருச்சியில் ஆரம்பித்த தேர்தல் பிரச்சாரத்தை ஏப்ரல் 17 ஆம் தேதி சென்னை நிறைவு செய்திருந்தார்.

இத்தகைய சூழலில் கோடைக்காலத்தையொட்டி ஓய்வெடுப்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (29.04.2024) கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்றார். அதன் பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார். கொடைக்கானலில் உள்ள தனியார் ஓட்டலில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்துடன் 5 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கவுள்ளார். அதன்பின்னர் கொடைக்கானலில் இருந்து மே 4 ஆம் தேதி சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

A BJP executive who tried to petition the Chief Minister stalin

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் கஞ்சாவுடன் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மனு கொடுக்க வந்த பாஜக ஓபிசி அணியின் செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டி என்பவர் வந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட மதுரை காவல் மாநகர காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதே சமயம் கொடைக்கானலில் இருந்தே தனது அலுவல் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் மேற்கொள்வார் எனவும் அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடைக்கானல் வருகையையொட்டி சுற்றுலா பயணிகள், சுற்றுலாத்தலங்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று முதல் மே 4 ஆம் தேதி வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது; சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Next Story

கோடை இளவரசியைக் காணச் சென்ற முதல்வர்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
The Chief Minister is coming to see the summer princess with sentiment

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோடை இளவரசியான கொடைக்கானல் பகுதியைக் காண தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கிறார்கள்.

இந்த ஆண்டு, வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அரசியல்வாதிகளும், அரசியல் கட்சித் தலைவர்களும் கோடை இளவரசியான கொடைக்கானலை காண வந்து செல்கிறார்கள். இந்த நிலையில், கோடை வெயிலை தணிக்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மாலத்தீவு செல்வதாக இருந்தது. ஆனால், திடீரென அதை ரத்து செய்துவிட்டு கோடை இளவரசி கொடைக்கானலை காண முடிவு செய்தார். அதன் அடிப்படையில், இன்று காலை 29ம்தேதி சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரைக்கு புறப்பட்ட முதல்வர் அங்கிருந்து கார் மூலமாக கொடைக்கானலில் உள்ள பாம்பார்புரத்தில் இருக்கும் தயாரா ஸ்டார் ஹோட்டலில் மே 4ஆம் தேதி வரை தங்க இருக்கிறார். 

முதல்வர் கொடைக்கானல் வருகையை ஒட்டி கொடைக்கானல் மூஞ்சி கல்லிலிருந்து பாம்பார்புரம் வரும் வரை சாலைகள் பேண்டேஜ் ஒர்க் பார்க்கப்பட இருக்கிறது. அதை தொடர்ந்து, இன்று காலை எட்டு மணி முதல் மதியம் ஒரு மணி வரை வத்தலக்குண்டு காட் ரோடு வழியாக கொடைக்கானல் செல்லும் சாலை போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. அதோடு கொடைக்கானல் மலைப்பகுதியில் ட்ரோன்கள், பலூன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் உத்தரவிட்டுள்ளார். அதுபோல், முதல்வர் பாதுகாப்புக்காக எஸ்.பி தலைமையில் இரண்டு ஏ.டி.எஸ்.பி, 2 டி.எஸ்.பி, ரெண்டு இன்ஸ்பெக்டர், பத்து சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 800க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

The Chief Minister is coming to see the summer princess with sentiment

கடந்த 2019ல் பாராளுமன்றத் தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாகவே முதன் முதலில் கொடைக்கானலுக்கு முதல்வர் ஸ்டாலின் வந்தவர், அங்குள்ள கால்டன் ஹோட்டலில் ஒரு வாரம் தங்கி இருந்து விட்டு சென்றார். அதன் பின், பாராளுமன்றத் தேர்தல் முடிவில் 40க்கு 39 தொகுதிகளை தி.மு.க கைப்பற்றியது. அதேபோல் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல் முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாகவே கொடைக்கானல் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பம்பார்புரம் தமாரா ஸ்டார் ஓட்டலில் தங்கி விட்டு சென்ற பின்பு தான் நூற்றுக்கு மேற்பட்ட சீட்டுகள் வாங்கியதன் பெயரில் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றார். அதைத் தொடர்ந்து, மூன்றாவது முறையாக தற்பொழுது பாராளுமன்ற தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கைக்கு ஒரு மாதம் இருக்கும் சூழ்நிலையில் கொடைக்கானலுக்கு முதல்வர் ஸ்டாலின் வந்துள்ளார். 

பாம்பாராபுரத்தில் தங்கிய தமாரா ஹோட்டலில் ஒரு வாரம் குடும்பத்தாருடன் தங்கி ஓய்வெடுக்க இருப்பதால் அரசியல் கட்சித் தலைவர்கள், கட்சி பொறுப்பாளர்கள், அமைச்சர்கள் யாரையும் முதல்வர் சந்திக்க விரும்பவில்லை. ஆனால், அரசியல் ரீதியாக மந்திரி சபை மாற்றம் மற்றும் துணை முதல்வராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கொண்டு வருவதற்கான ஆலோசனையும் குடும்பத்தாருடன் பேசி முதல்வர் முடிவெடுக்க இருக்கிறார் என்ற பேச்சும் இருந்து வருகிறது. இப்படி சென்டிமென்ட் மூலம் முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து ஒவ்வொரு தேர்தலையும் கொடைக்கானல் வந்து கோடை இளவரசியை ரசித்து விட்டு செல்வது போலத்தான் தற்பொழுதும் கோடை இளவரசியைக் காண கொடைக்கானல் வந்திருக்கிறார். அதைத் தொடர்ந்து, முதல்வர் வருகையையொட்டி, அங்கு போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.