Skip to main content

சின்னம்மா மீது விழுந்த கொலைப் பழியை துடைத்தவர் வெற்றிவேல்..! அமமுகவினர் வேதனை..!

Published on 15/10/2020 | Edited on 15/10/2020
AMMK treasurer Vetrivel

 

We will swim together or We will sink together இதுதான் வெற்றிவேல் அடிக்கடி சொல்லும் வார்த்தை. தினகரனுடன் சேர்ந்து தனி அணியாக செயல்பட்டபோது எடப்பாடி பழனிசாமி, வெற்றிவேலை அழைத்தார். அந்த அழைப்புக்கு வெற்றிவேல் சொன்ன பதில்தான் இந்த வார்த்தைகள்.

 

நீந்தினால் ஒன்றாக நீந்துவோம். மூழ்கினால் ஒன்றாக மூழ்குவோம் என சொன்ன வெற்றிவேல் தினகரனுக்கு பழக்கமானது ஜெயலலிதா த.மா.கா. உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தியபோது அதில் ரகசியமான விஷயங்களை பேச தினகரனை மூப்பனாரிடம் அனுப்புவார். அப்பொழுது மூப்பனாரின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்த வெற்றிவேல், தினகரனுக்கும் சசிகலாவுக்கும் பழக்கமானார். அந்தப் பழக்கம் அவரை அதிமுகவுக்கு கொண்டு வந்தது. கடைசி வரை சசிகலா ஆதரவாளராக நிலைக்க வைத்தது. 

 

ammk

 

ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வீடியோ காட்சிகளை வெற்றிவேல் வெளியிட்டார். அப்பொழுது இளவரசி மகள் கிருஷ்ணப்பிரியா வெற்றிவேலை கண்டப்படி திட்டினார். நான் சின்னம்மா மீது அம்மாவை கொன்றார்கள் என்ற கொலைப்பழியை துடைக்கத்தான் இந்த வீடியோவை வெளியிட்டேன் என சொன்ன வெற்றிவேலிடம் அதுபோல ஒன்பது வீடியோக்கள் இருந்தது. சசிகலா கேட்டுக்கொண்டதற்காக அவற்றை வெற்றிவேல் சாகும்வரை வெளியிடவே இல்லை. 

 

சங்கராச்சாரியாரை ஜெயலலிதா கைது செய்வதற்கு முன்பு அப்பு என்கிற ரவுடியை கைது செய்ய முயன்றார். அப்பு வெற்றிவேலின் நண்பர். ஜெ. காவல்துறை மூலம் வெற்றிவேலின் உதவியை நாடினார். ஜெ. சொன்னதற்காக நண்பர் என்றும் பாராமல் அப்புவின் செம்மரக்கட்டை குடோன்களை வெற்றிவேல் உடைத்தார். குடோன் உடைப்பட்டதும் பயந்துபோன அப்பு, காவல்துறையில் சரண் அடைந்தார்.

 

இப்படி விஸ்வாசத்துடன் உள்ளொன்று வைத்து, புறம் ஒன்று பேசாமல் வெளிப்படையாக உண்மையை பேசி வாழ்ந்த வித்தியாசமான அரசியல்வாதி வெற்றிவேல். இவர் அமைச்சர் ஜெயக்குமாரின் கீழ்த்தரமான நடவடிக்கைகளை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தினார். அப்பொழுதுகூட ஜெயக்குமாரை மோசமான வார்த்தைகளில் அவர் வர்ணிக்கவில்லை. 

 

நான் மூப்பனாரின் வளர்ப்பு, நம்பிக்கை, நாணயம் இதுதான் என் சொத்து என சொன்ன வெற்றிவேலை தனது மனசாட்சி என டிடிவி தினகரன் வர்ணிப்பார். தினகரனைவிட சசிகலாவுக்கு அதிக விஸ்வாசத்தை காட்டியவர் வெற்றிவேல். சசிகலா வெளியே வருவதை காணாமல் மறைந்துவிட்டார் என்கிறார்கள் அமமுகவினர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

“குக்கர் மாதிரிதானே அவருடைய முகமும் குண்டா இருக்கு” - டிடிவி தினகரன் மனைவி கலகல பேச்சு!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
His face is chubby like a cooker tTV Dhinakaran's wife's speech

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அந்த வகையில் தேனி நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் தங்க தமிழ்ச்செல்வன். அதிமுக சார்பில் நாராயணசாமி, பாஜக கூட்டணி சார்பில் அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், நாம் தமிழர் கட்சி சார்பில் மதன் உட்பட நான்கு முனை போட்டியுடன் சுயேட்சைகளும் களமிறங்கி தேர்தல் களத்தில் வலம் வருகிறார்கள். அதே சமயம் பாஜக கூட்டணி சார்பில் களம் இறங்கியுள்ள டி.டி.வி தினகரன் தேனி தொகுதியில் பல இடங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். மேலும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக தமிழகத்தில் பல பகுதிகளில் டிடிவி பிரச்சாரம் செய்யப்போவதாகவும்,  எனது மனைவியும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என்றும் சொல்லி இருந்தார். 

His face is chubby like a cooker tTV Dhinakaran's wife's speech

அதன் அடிப்படையில் தான் டிடிவி தினகரன் மனைவி அனுராதா தனது கணவருக்காக தேனி பாராளுமன்ற தொகுதியில் உள்ள பல பகுதிகளில் தேர்தல் களத்தில் வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார். அதன்படி மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக அவரது மனைவி அனுராதா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டபோது, “குக்கர் சின்னத்தை எல்லோரிடத்திலும் கொண்டு செல்லுங்கள். சின்னத்தில் குழப்பம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மற்றவருக்கும் சின்னத்தை எடுத்து சொல்லுங்கள். ஏனென்றால் இதற்கு முன் போட்டியிட்டபோது வேறொரு சின்னத்தில் டிடிவி தினகரன் போட்டியிட்டதால் இதை சொல்கிறேன். குக்கர் மாதிரிதானே அவருடைய முகமும் குண்டா இருக்கு”என கலகலப்பாக பேசி வாக்கு சேகரித்தார்.