Skip to main content

நடிகர் ஜே.கே.ரித்திஷ் திடீர் மரணம்!

Published on 13/04/2019 | Edited on 13/04/2019

 

நடிகரும், முன்னாள் எம்.பியுமான ஜே.கே.ரித்திஷ் (வயது 46) மாரடைப்பால் மரணம் அடைந்தார்.  ராமநாதபுரத்தில் உள்ள இல்லத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

 

jk

 

 இலங்கை கண்டியில் பிறந்த சிவக்குமார் என்கிற ரித்திஷ்  ராமநாதபுரத்தில் குடியேறினார். ’சின்னபுள்ள’படத்தில் அறிமுகமானார்.  கானல்நீர், நாயகன், பெண்சிங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். அண்மையில்  இவர் நடித்த எல்.கே.ஜி. படம் பலராலும் பாராட் டப்பட்டது.     


2009ம் ஆண்டு மக்களவை தேர்தலில் ராமநாதபுரம்  தொகுதியில் திமுக வேட்பாளராக களம் இறங்கி வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றார். தி.மு.க. வேட்பாளர் சிவக்குமார் என்ற ஜே.கே.ரித்திஸ் 2,94,945 வாக்குகள் பெற்று 69 ஆயிரத்து 915 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்.  பதவியேற்பின்போது ரித்திஷின் நடை,உடை, தோற்றத்தை பார்த்து ப.சிதம்பரத்திடம் சோனியாகாந்தி விசாரித்ததாகவும், ப.சிதம்பரம் இவரைப்பற்றி கூறிய தாகவும் அப்போது தகவல் வெளியாகின.

 

ராமநாதபுரம் தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.கே.ரித்திஷ், 2014ம் ஆண்டில் அதிமுகவில் இணைந்தார். சென்னை போயஸ் கார்டனில் முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து, அதிமுகவில் அவர் இணைந்தார்.  ஜெ. மறைவுக்கு பின்னர் தினகரன் அணியில்  இருந்தவர் பின்னர் எடப்பாடி அணிக்கு மாறினார்.
 

 நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கத்திலும் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர் ரித்திஷ்.  திமுக முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலன், இவருக்கு தாத்தா என்று கூறப்பட்டது. ஆனால், பின்னாளில் தாத்தா பேரனுக்கும் இடையே மோதல் வெடித்தது.  

 

ஜ்க்

 

மறைந்த ரித்திஷுக்கு  ஜோதீஷ்வரி என்ற மனைவியும் ஆரிக் ரோசன் என்ற மகனும் உள்ளனர்.  

 

குறைந்த அளவே படங்களில் நடித்திருந்தாலும் கோடம்பாக்கத்தில் இவரது முகம் தெரியாதவர்கள் எவரும் இருக்கமுடியாது. அந்த அளவுக்கு அனைவரையும் கவர்ந்திருந்தார்.   இவரால் உதவி பெற்றவர்கள் பல ஆயிரம்  பேர்  இருக்கும் என்கிறார்கள்.  கோடம்பாக்கத்தில் இவரை வள்ளல் என்றே அழைத்து கட்-அவுட் வைத்து வந்தனர்.
 

ரித்திஷின் மறைவுக்கு  இயக்குநர் பாரதிராஜா, நாசர், விஷால், கருணாஸ் என்று திரையுலகினரும்,  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதலவர் ஓ.பன்னீர் செல்வமும் இரங்கல் தெரி வித்துள்ளனர். 

 

வேறு இயக்கத்தில் சேர்ந்தாலும் தனது பழைய நட்பை மறவாதவர் ரித்திஷ்.  அவருடைய மரண செய்தி கேட்டு அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன் என்று தெரிவித்துள்ளார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தேசிய விருது வென்ற மூத்த இயக்குநர் காலமானார் 

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
pasi movie director durai passed away

தமிழ் சினிமாவில் கதாசிரியர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளராக பணியாற்றியவர் துரை. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உட்பட மொத்தம் 46 திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் 1979 ம் ஆண்டு வெளியான பசி திரைப்படம் பெறும் வரவேற்பை பெற்றது. 

ஏழை எளிய மக்களின் வாழ்க்கையை எதார்த்தமாக வெளிப்படுத்தியதாக பாராட்டை பெற்ற இப்படம் இரண்டு தேசிய விருதுகளை வென்றது. மேலும் இரண்டு மாநில விருது உட்பட சில விருதுகளையும் வென்றது.  இப்படம் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார் துரை. மேலும் ரஜினியை வைத்து ஆயிரம் ஜென்மங்கள், கமலை வைத்து நீயா, சிவாஜியை வைத்து துணை உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார். 

கடந்த பல வருடங்களாக சினிமாவிலிருந்து ஓய்வுபெற்றிருக்கும் துரை (84) இன்று உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையொட்டி திரைபிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் சமூக வலைத்தளங்களில் தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். துரைக்கு மனைவி, இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story

“மலரும் தருணங்கள் நினைவுக்கு வருகின்றன” - ரஜினி

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
rajini condolence to kannada actor dwarkish passed away

கன்னட திரையுலகில் நடிகர், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர் என பல்வேறு சினிமா துறைகளில் பணியாற்றியவர் துவாரகிஷ். 1964 ஆம் ஆண்டு கன்னட சினிமாவில் நகைச்சுவை நடிகராக துவாரகிஷ் அறிமுகமானார். நடிகராக வெற்றி பெற்ற பிறகு, தயாரிப்பு மற்றும் இயக்கத்திலும் கவனம் செலுத்தினார். அவர் 48 படங்களைத் தயாரித்துள்ளார் மற்றும் கிட்டத்தட்ட 19 திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் அவர் இறந்துள்ளார். அவருக்கு வயது 81. வயது மூப்புக் காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டு, அவர் காலமானதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டியில் உள்ள அவரது வீட்டில், துவாரகிஷ் தூங்கிக்கொண்டிருந்த நிலையில் தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

rajini condolence to kannada actor dwarkish passed away

இவரது மறைவு திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரகாஷ் ராஜ் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் தனது இரங்கலை பகிர்ந்திருந்தார். இதையடுத்து தற்போது ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் பகிர்ந்துள்ள எக்ஸ் பதிவில், “எனது நீண்ட நாள் அன்பு நண்பர் துவாரகிஷின் மறைவு எனக்கு மிகவும் வேதனை அளிக்கிறது. காமெடி நடிகராக தனது வாழ்க்கையைத் தொடங்கி, ஒரு பெரிய தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் தன்னை உயர்த்தியவர். அவருடனான மலரும் தருணங்கள் என் நினைவுக்கு வருகின்றன. அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.